Tuesday, June 13, 2017

கடுகு


படத்தில் 'வில்லன்' பரத் கதாப்பாத்திரத்தை அவ்வளவு யதார்த்தமாய் சித்தரிக்க முடிந்தவர்களால், ஏன் 'கதாநாயகன்' ராஜ்குமார் பாத்திரத்தை அவ்வாறே வடிவமைக்க முடியவில்லை ?
பரத்தின் பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி, ஓட்டிப் பார்த்தால்.. நல்ல படமாய் இருக்கும் போலிருக்கே.. என்று சிலாகிக்க முடியும். பரத்தும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவர் நடித்த படத்திலேயே சிறப்பானது இது தான்.
தேவயானி புருஷர் ராஜ்குமாரின் கதாப்பாத்திரத்திற்கு வரலாம். விக்ரமன் படத்தில் வரும் நல்லவர்களுக்கே சவால் விடும் பாத்திரப்படைப்பு. காதலியாய் வரும் 'குற்றம் கடிதல்' நாயகி ராதிகா ப்ரஷித்தா, அவரின் ஃபிளாஸ்பேக்கை அவிழ்த்து விடும் போதே, படம் மூழ்க ஆரம்பித்து விடுவது கண்ணுக்கெதிராய் தெரிகிறது.
யதார்த்தத்தோடு சினிமாதனத்தை கலக்குகிறோம் பேர்வழி என்று அமெச்சூர் நாடகத்தனத்தை ஓவர் டோஸாய் கலந்து விட்டார்கள்.

0 comments:

Post a Comment