Wednesday, January 25, 2017

கிடாரி ! - ஒரு பார்வை


சாத்தூர் ஊரின் பெரிய கையான கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி) குத்துப்பட்டு, சாக கிடக்கும் நிலையில், கொம்பையாவின் கணக்கு வழக்குகளை பார்க்கும் பெரியவரின் வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது படம். அவர் கொம்பையாவிற்கு மச்சானும், அவர் மகனிற்கு பெண் கொடுத்த சம்பந்தியும் கூட.

கொம்பையாவின் இந்த நிலையிற்கு யார் காரணமாய் இருக்கக் கூடும் என்று பெரியவர் விவரிக்க ஆரம்பிக்கிறார்.

கொம்பையா பாண்டியன் பகை வளர்த்த எதிரிகளின் பெயிண்ட் ஆர்ட் புகைப்படங்களுடன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பிப்பது திரைக்கதை பாணியில் சுவாரசியத்தை கூட்டுகிறது.

கொம்பையா தம் மகனிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வளர்ப்பு பிள்ளை மற்றும் விசுவாச வேட்டை நாயாய் இருக்கும் அடியாள் கிடாரி சசிகுமார் மீது அதிக அக்கறை காட்டுவது காண்பிக்கப்படுகிறது.

ஆனால் எந்த விஷயம், சுவாரசியத்தை கூட்டியதோ அதே விஷயம் பெரும் அலுப்பை தட்டி விடும் இடம், இறுதியில் கிடாரிக்கான ஃபிளாஸ்பேக்கும் அதே தொனியில் விரிவது. இயக்குநனரே எதிர்பார்த்திருக்க மாட்டார் இது திரைக்கதையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்பதை.

அதில் இன்னொரு காரணமும் உண்டு. வலிய திணிக்கப்பட்ட கதாநாயகி மற்றும் காதல் காட்சிகள். ஒரு திரைப்படத்திற்கு அத்தியாவசமான எலிமென்ட் என்று அதை பெரியவரின் கதை சொல்லாடலிலிற்கு இடையே புகுத்தி இருப்பது மன்னிக்க முடியாத ஒன்று.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் கதாபாத்திரங்களின் தேர்வும், திரைக்கதை அமைப்பின் காட்சிகளும் மண் மணத்துடன் நகர்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட காரணங்களால், இது வழக்கமான சசிகுமாரின் வெட்டு குத்து படம் தான் என்ற முத்திரையுடன் முடிவடைகிறது.


Tuesday, January 24, 2017

ராஜ போதை - PLAY LIST 1 TO 5


ஆடியோ காணொளியில் 
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976
பத்தியில் 
SHOW MORE
சொடுக்கினால் 
பாடல்களின் பட்டியல் தெரிய வரும் !





 





Monday, January 23, 2017

ராஜ போதை - 5



ராஜ போதை - 5
தோழர்களே ! தோழிகளே !
அனைவரையும் சாந்தப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் ராஜாவின் பாடல்கள் கேட்டு...
மனதை சற்று அமைதி கொள்ளசெய்யுங்கள்.
தொகுப்பு ஐந்து !!
01.1984 Enakkul Oruvan - Mutham Pothathey
02.1984 Kai Kodukkum Kai - Thaazham Poove
03.1984 Kairaasikkaaran - Kai Veesum
04.1984 Kairaasikkaaran - Nilavondru Kanden
05.1984 Komberi Mookkan - Roja Ondru
06.1984 Magudi - Neelakkuyile
07.1984 Mudivalla Arambam - Thenageetrum
08.1984 Naan Mahaan Alla - Maalai Soodum

09.1984 Naan Paadum Paadal - Duet Devan Kovil Deepam
10.1984 Naan Paadum Paadal - Paadava Un Paadalai
11.1984 Naan Paadum Paadal - Paadum Vaanam Paadi
12.1984 Naan Paadum Paadal - Seer Kondu Vaa
13.1984 Nallavanukku Nallavan - Chittukku Chella
14.1984 Nallavanukku Nallavan - Muthaduthe
15.1984 Nallavanukku Nallavan - Unnaithane
16.1984 Neengal Kettavai - Oh Vasantha Raja
17.1984 Oh Manae Manae - Roja Ondru
18.1984 Oru Kaidhiyin Diary - ABC Nee
19.1984 Oru Kaidhiyin Diary - Pon Maane
20.1984 Poo Vilangu - Aathadi Paavadai
21.1984 Poo Vilangu - Kannil Etho
22.1984 Unnai Naan Santhithen - Devan Thantha
23.1984 Unnai Naan Santhithen - F Thalatu Maari Ponadhe
24.1984 Unnai Naan Santhithen - Hey I Love You
25.1984 Unnai Naan Santhithen - Unnai Kaanum Neram

Friday, January 13, 2017

பைரவா (நோ ஸ்பாய்லர்ஸ் :-D )



விஜயை பற்றி படத்தின் கேமராமேன் ஒரு பேட்டியில் சிலாகித்திருந்தார். அவரை சுற்றி நான்கு கேமராவை வைத்தாலும், அந்த நான்கு காமெராக்குமே ஐஸ்டிஃபை செய்கிற மாதிரி அவுட்புட் கொடுத்து விடுவாராம். அது தான் விஜய்! நவரசங்கள் சொட்ட நடிக்கும் நடிகரா விஜய்? என்றால்... கிடையாது. ஆனால் அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கும் அம்சம் அவரிடத்தில் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

விஜயின் இளம், பேரிளம் ரசிகர்களை விட இளம் பெண்கள், பேரிளம் பெண்கள் மற்றும் பலதரப்பட்ட குடும்பங்கள் இன்று நான் கண்டுகளித்த திரையரங்கில் நிறைந்திருந்ததே அதன் சாட்சி. இதை எந்த கொம்பனாலும் (நன்றி:ஸ்டாலின்) மறுக்க முடியாது.

வெளியே மேன்ஷன் என்று காட்டப்பட்டு விஜய் மற்றும் அவர் நண்பர் சதிஷ் தங்கியிருக்கும் அறை, மற்றும் அவர் கலெக்ஷன் பாயாக வேலை பார்க்கும் வங்கி என்று எல்லாமே பகட்டான இடமாய் காட்டப்படுகிறது. கலர்ஃபுல் காட்சிகளாய் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வடிவமைத்திருக்கிறார்கள்.

ராம்ராஜ் ப்ரிண்டட் சட்டையுடன் மாஸ் ஸீன் லீட் கொடுக்கப்பட்டு சண்டை ஆரம்பமாகிறது. சண்டை முடிந்தவுடன் பாடல். வந்ததா ? இல்லையா ? வந்திருக்கும். பின்பு நாயகி அறிமுகம். பின்பு அவரை பின் தொடரும் படலம்.

இரண்டு இஞ்ச் அளவிற்கே இருக்கும் கீர்த்தி சுரேஷின் வாய் எப்படி.. வாயை திறந்தால் ஆறு இஞ்ச்-ற்கு விரிகிறதோ... அப்படி ஒரு ஃபிளாஸ்பேக்.. அவரின் வாய் வழி மூலமாக... அங்கே வரும் அதே வாயளவு
கொட்டாவியை அடக்கி விட்டு படத்தை தொடர எத்தனித்தால்.. இடைவேளை !

ரொம்பவுமே பேஸ்தடித்து தான் உட்கார்ந்து இருந்தேன். வேட்டைக்காரனில் ஆரம்பித்து பயணம் சுறா...பகவதி என்று பின்னால் போனது. நல்லவேளை பிற்பகுதியில் அப்படி சுமோக்கள் பறக்க, புஜ படைகள் சூழ படிக்கட்டுகள் ஏறி இறங்கி காட்சிகள் ஏதுமில்லை.

அதற்காக சந்தோஷப் பட வைத்தார்களா..? பழைய படங்களின் தோல்விகளின் இருந்து நாங்கள் பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளோம் என்று சீரியஸ் வில்லனை காமெடி வில்லனாக சித்தரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Nitrous oxide எனும் சிரிப்பு வாயுவை பழங்கால திரைப்படங்களிலேயே பார்த்தாகி விட்டதே... என்னோமோ இப்போது தான் இந்த உலகிற்கு இவர்கள் அறிமுகப்படுத்துகிற மாதிரியான காட்சியமைப்புகள். அதனை நம்மீது முகர செய்தால் கூட சிரிப்பு வராத வறட்சி திரைக்கதை. இப்படியாக கிஞ்சித்தும் அழுத்தமில்லாத; சுவாரஸ்யமில்லாத காட்சிகளால் படம் தொடருகிறது. முடிவடைகிறது.

மருத்துவ கல்லூரி, மாணவர்களுக்கான தேர்வு முறை, கல்லூரியை நடத்தும் தாதா - என்று ஷங்கர், முருகதாஸ் டச் செய்ய வேண்டிய விஷயத்தை இயக்குனர் பரதன் தொட முயற்சித்து பெரும் தோல்வியை கண்டிருக்கிறார்.

Friday, January 6, 2017

#துருவங்கள்16 #D16 (நோ ஸ்பாய்லர்ஸ்)




படத்தை முதல் காட்சியிலிருந்து தவற விடாமல் பார்க்க வேண்டும் என்றே நாலாப்பக்கமும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஒருவேளை அதை தவிர்த்து, டைட்டில் போடும் காட்சியில் சென்றிருந்தால் எனக்குள் ஏற்றப்பட்ட மண்டை குழப்பம்  சிறிது தவிர்க்கப்பட்டிருக்கும். அது நம்மை குழப்புவதற்காக இயக்குனர் கடைபிடித்த உத்தி என்ற போதிலும், அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. என்ன தான் அதை பிற்பாடு நியாயம் செய்திருந்தாலும் ஏதோ ஏமாற்றப்பட்ட ஒரு உணர்வு.

படத்திற்கு பெரும் பலம் ரகுமானின் அசாதாரண நடிப்பு. மல்டி டாஸ்கிங் செய்து கொண்டே பெரும்பாலும் பேசி நடிப்பது சிறப்பு. அதை படம் முழுக்க மெயின்டெயின் செய்ய வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
கார் ஆக்சிடென்ட் செய்யும் அந்த மூன்று இளைஞர்களின் முகங்களை நம்முள் பதிய செய்த அளவிற்கு, அந்த பக்கத்தில் நடக்கும் க்ரிஷ், அவரின் நண்பர் மற்றும் ராஜிவ் முகங்களை பதிய செய்யாததும் திட்டமிடப்பட்டு நம்மை குழப்புவதற்காக தான். அது தேவையில்லாத ஒன்று. தெளிவாகவே காட்டியிருக்கலாம். எல்லா சென்டர் ரசிகர்களும் படம் பார்க்க வேண்டும். இந்த எண்ணம் இயக்குனருக்கு இல்லையோ என்ற சந்தேகம் வலுப்பெறுவது - நேரத்துடன் இடங்களின் பெயர்களை போடும் போது - அவைகள் ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்படும் போது.
இயக்குனர் ஒரு பேட்டியில், "இப்ப உள்ள ஆடியன்ஸ்லா செம புத்திசாலிங்களா இருக்காங்க.. .". அந்த டார்கெட்டில் படம் எடுத்ததால் தான் நமக்கு இப்படி ஒரு படம் கிடைத்திருக்கிறது. ஆனால் ஆங்கிலம் தெரியாத புத்திசாலிகளும் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
படத்தில் சில லாஜிக்கலான கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அது ஸ்பாய்லர்ஸ். நண்பர் Subas Sunder அதை லிஸ்ட் செய்து இருக்கிறார். வேண்டுமென்றால் அவர் பதிவில் படித்துக் கொள்ளலாம்.
இவையெல்லாவற்றையும் நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தோன்றாது. முடித்து வெளியே வரும் போது தான் கேள்விகள் முளைக்கும். அது தான் இயக்குனரின் சாமர்த்தியம். திரில்லர் டைப் படங்களுக்கு படம் முடிந்த பிறகு தானே கேள்விகள் முளைக்கும்? என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கறது.
ஹீரோயின் - சண்டைக்காட்சிகள் - பாடல்கள் - (கிளைமாக்ஸில் மட்டும் ஒரு பாட்டு) இல்லாமல், அந்த பக்கம் இந்த பக்கம் நகர விடாமல், ஆணியடித்தார் போல் உட்கார வைத்து படம் காண்பிப்பது லேசுப்பட்ட விஷயம் அல்ல.
குறும்படம் எடுக்கும் இளைஞர்களில் ஒருவராய் இயக்குனர் கார்த்தி நரேனும் தலைகாட்டிருக்கிறார்.
கடைசியாய் முளைத்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டு உரையை முடித்துக் கொள்கிறேன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட ஒரு ஆளிற்கு தாடி முளைக்குமா ?

தியேட்டார்  டிட் பிட்ஸ் : 

காட்சி தொடங்குவதற்கு முன்னரே சென்றதால் கவனிக்க முடிந்தது. பின்னிருக்கை வரிசையில் குறைந்தபட்சம் பத்து நபர்களையாவது அடங்கிய ஒரே குடும்பம். அதில் எல்லா வயது ரக ஆட்களும் இருந்தார்கள். ஐந்து, ஒன்பது, பதினாறு வயது தொடங்கி அறுபது சொச்ச வயது வரையிலான பாட்டி வரை கூட்டிக் கொண்டு வந்த குடும்பத் தலைவரின் மீது அளப்பரிய மரியாதை வந்தது.
அதே சமயத்தில் இவர்களால் படத்தை கூர் நோக்கும் பயணம் தடை படுமோ என்ற அச்சமும் கவ்வியது. படம் தொடங்குவதற்கு முன், கு. தலைவர்..."இப்ப.. ஜன கன மன.. போடுவாங்க... எல்லாரும் எந்திருச்சு நிக்கணும்.. அப்படி நிக்கலன்னா.. மூணு வருஷம் ஜெயில்...இதுவரைக்கும் ஏழு பேரை பிடிச்சி போட்டுறாங்க..." என்கின்ற வாட்ஸ் அப் தகவலினை தன் குடும்பத்தினருக்கும் சுற்றி உட்கார்ந்திருக்கும் மக்களுக்கும் பகிர்ந்து பயமுறுத்தி கொண்டிருந்தார்.
படம் தொடங்கியது. நான் பயந்த அளவு இல்லை. சுமூகமாகவே சென்றது.
இடைவேளை முடிந்து, சில ட்ரைலர்களுக்கு முடிவாய், ஜி.வி.ப்ராகாஷின் 'புரூஸ் லீ' படத்தின் முன்னோட்டம் ஒளிபரப்பப்பட்டது. ட்ரைலரின் ஒவ்வொரு காட்சிற்கும் அப்படி விழுந்து விழுந்து சிரித்தார்கள், மொத்தக் குடும்பமும்.
நாம் தமிழர்களின் நகைச்சுவை வறட்சியும் ஜல்லிக்கட்டு புரட்சியும் ஒரு சேர நினைவிற்கு வந்து போனது.