Tuesday, June 13, 2017

டோரா :


சொந்த குரலில் 'அப்பா.. அப்பா.. ' என்று கூப்பிடும் அழகாட்டும், அப்பாவை அவ்வப்போது கலாய்ப்பதாகட்டும் நயன் கொள்ளை அழகு. என்ன ஜீரோ சைஸ் ஆகிறேன் பேர்வழி என்று உடம்பை வத்தலாக்கி வைத்திருக்கிறார். வத்தலோ, தொத்தலோ.. நடிப்பில் குறையொன்றும் வைக்கவில்லை. அவருக்கு முத்தான முதற்கண் வணக்கம்.
நயனின் நடிப்பை யாரேனும் பிடிக்கவில்லை என்று சொன்னால், வீடு தேடி வந்து அடிப்பேன். எங்கே வா - என்று சொன்னால்... தந்திரமாய் இந்த பத்தியை மட்டும் டெலீட் செய்து விடுவேன்.
பரவாயில்லை.. அப்பா தம்பி ராமையா தமது சில்மிஷங்களை காட்டாமல் இருக்கிறாரே.. என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூச்செடுக்கும் அதே சமயத்தில் தமது நவரச திறன்களை வெளிப்படுத்தி 'ராமையாடா' என்று நிரூபித்து விடுகிறார்.
சுவாரசியமான பிளாட் கொண்ட கதை தான். நகரில் பானிபூரி விற்பது, பெட்ஷீட் விற்பது என உப தொழில் செய்து கொண்டே வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளை/கொலைகளை நிகழ்த்தும் கும்பல். அவர்களை பிடிக்க தீவிரமாய் trace அவுட் செய்யும் இன்ஸ்பெக்டர்.
ஒரு கட்டத்தில், கொள்ளையர்கள் ஒவ்வொருவராய் இறக்கின்றனர். காவல்துறைக்கு மேலும் தலைவலி. இப்போது கொள்ளையர்களை கொலை பண்ணும் ஆளை தேடி அலைய வேண்டியதாகிறது. கொலை செய்வது யார் ? நயனிடம் வந்து சேரும் காரின் பின்னணி என்ன ? என்று படிப்பதற்கு விறுவிறுப்பான தானே இருக்கிறது !
ஆனால் அதை காட்சி மொழியாய் திரையில் பார்க்கும் பொழுது முழுவதுமாய் ட்ரான்ஸ்ஃபார்ம் இந்தப் படம் நல்லதொரு காட்சி அனுபவத்தை கொடுக்கவில்லை. திரைக்கதையில் அழுத்தமும் இறுக்கமும் நெகிழ்வும் இல்லை. :-P . எல்லாம் இருந்தும் ஏதுமில்லா ஜென் நிலை.
படத்தை பார்க்கலாமா ? வேண்டாமா ? என்று கேட்பீர்களேயானால்.. 'கண்டிப்பாய் பார்க்கலாம்..' என்றே சொல்வேன். பார்த்து விட்டு எங்கே மிஸ் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லும் பட்சத்தில்.

0 comments:

Post a Comment