Tuesday, September 30, 2014

குடி குடியை கெடுக்கும்


‘விஜய்’யின் மகாபாரதம் ஆகட்டும் ‘சன்’னின் மகாபாரதம் ஆகட்டும் சகுனி, துரியோதனன் & கோ இரவு நேரங்களில் அடுத்த நாளைக்கான சதியாலோசனையை சோம பானம் அருந்தி கொண்டேதான் நடத்துகிறார்கள். அப்போ மட்டும் “குடி குடியை கெடுக்கும்” டிஸ்கி ஏதும் போட மாட்டேன்றாங்க..
#தட்_தக்காளி_மொமென்ட்  :-)

Friday, September 19, 2014

கனவின்(ல்) வலி


மதியம், ஒரு குட்டி தூக்கத்திற்கு பிறகெழுந்து, டீ கேட்டு குடித்து Subway Surfers விளையாட ஆரம்பித்தான் அவினாஷ். ஓரிரு நிமிடங்களில் திடீர் கேள்வியை கேட்டான்.
“அப்பா, நான் கனவுல இருக்கிறேனா ? நிஜத்துல இருக்கிறேனா ?” -
“ஏண்டா கேக்குற ?”
“இல்ல, கனவுல எனக்கு Subway Surfers வேற மாதிரி ஸ்க்ரீன் வந்துச்சு. இங்க பாருங்க, இங்கேயும் வேற மாதிரி ஸ்க்ரீன் வருது, அதான் கேட்டேன்.”
ஏதோ ஒரு லெவலை கடந்து விட்டான் போலும். ஸ்க்ரீன், கலர் என கேமின் பேக் ட்ராப்பே மாறியிருக்கிறது. மூளையை முழுவதும் அந்த கேம் தான் ஆக்கிரமித்திருக்கிறது. என்ன செய்ய…
அவனை சீண்டும் பொருட்டு, தொடையில் லேசாய் கிள்ளி, “வலிக்குதா ?” என்றேன்.
“ஆமாம்”
“அப்போ இது நிஜம்!”
கொஞ்சம் யோசித்து..கேட்டான், “நீங்க கனவுல கிள்ளுனா. எனக்கு வலிக்குமா, வலிக்காதான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
— ங் + ஏ = ஙே….
கனவில்(ன்) வலி உணர முடியுமா ? முடியாதா ?