Saturday, February 21, 2015

Airtel Super Singer Junior 4 ‪#‎SSJ‬ ‪#‎GrandFinale‬



ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 பவர்டு பை எனெர்ஜி தரும் கோல்டு வின்னர், கோ ப்ரெசென்ட்டட் பை அருண் எக்ஸ்செல்லோ அண்ட் NAC ஜூவல்லர்ஸ், இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் - இனிதே நடந்து முடிந்தது. இறுதிச் சுற்றில் பாடிய ஆறு போட்டியாளர்களுமே திறமையானவர்கள் தான். சினிம-அதிர்ஷ்டம் கை கூடும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஜொலிக்க கூடியவர்கள் தாம்.

**

ஸ்ரீஷா - பொறுத்தவரை நேரடியாய் ரெகார்டிங் ஸ்டுடியோவிற்கு செல்லலாம் என்று நடுவர்களாலே அடிக்கடி பாராட்டைப்   பெற்றவர். மட்டுமல்லாம் சினிமாவில் பாட வாய்ப்பும் கிடைத்தாயிற்று.

**

அனுஷ்யா - ஒன்பதே வயது குட்டிப் பெண்.  ரீ என்ட்ரி ரவுண்டு மூலம் நுழைந்து, 'பறை' பாடலை பாடி பட்டையை கிளப்பி, அடுத்தடுத்து நல்ல நல்ல Performance கொடுத்து Pre - Finals இல் கலக்கியவர். சொல்ல முடியாது, அடுத்து சிங்கரில் மறுபடியும் களமிறக்கப்படலாம்.
**
'பரத்' - நல்ல எனெர்ஜடிக் சிங்கர். கார்த்தியின் அக்மார்க் தெலுகு மொக்கை படமான அலெக்ஸ் பாண்டியனில் வரும் மொக்கை பாடலான 'Bad Boy' பாடலை அசத்தலாய் பாடி, அந்த பாட்டையே பிடிக்கச்  செய்தவர். மெலடி பாடல்களையும் பாடி திறமையை நிரூபித்தவர்.
**
'ஹரி பிரியா' -  இவருக்குத் தான் முதலிடம் என்கின்ற மாதிரி ஒரு மாயையை உண்டாக்கியதில் விஜய் டிவிக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமீபத்தில் மறைந்த அவரின் தந்தையை பற்றி அடிக்கடி பேச வைத்து, சென்டிமென்ட் கொடுத்து எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தவர்கள். அதற்காக இவர் திறமை குறைந்தவர் என்று மதிப்பிட முடியாது. ஸ்ரீஷா, ஜெசிக்கா வை விட நன்றாய் பாடக் கூடியவர்.
**
'ஜெஸ்ஸிகா' - கடைசி நேரத்தில் ஆட்டத்தை கலைத்தவர்.  தமிழனம், தனி ஈழம் என்று  அனைத்திந்திய, உலக  தமிழர்களின் கண்களில் வலுக்கட்டாயமாய் கண்ணீரை வரவழைத்து கல்லா கட்டி வளைத்து போட்டதில் தான் இருக்கிறது விஜய் டிவி மற்றும் ஏர்டெலின் வியாபார சூட்சுமம். 'ஹரி பிரியா', ஸ்ரீஷாவை விட 'நடுவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்' ஒன்றரை மார்க் கம்மியானவர் தான்.
**
ஜெஸ்ஸிகா கனடாவில் வசிப்பவர். வசதியான குடும்ப பின்னணியை கொண்டவர் மாதிரி தான் தெரிகிறது. பரிசாய் கிடைத்த  ஒரு கிலோ தங்கத்தை, தமிழகத்தில், இலங்கையில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கு கொடுத்து புண்ணியம் தேடிக் கொண்டார்கள். பட் இந்த டீலிங்கில் தான் இருக்கிறது 'விஷயம்' என்றே பட்சி சொல்கிறது.
**
ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம், வருட வருடமாய் புடுங்குவதை விட, ஏர்டெல் ஒன்னும் பெரிதாய் புடுங்கி விடவில்லை, மக்கள் பணத்தை.  அது ஒரு தொழில்  நிறுவனம். முதலீடு போட்டு, செலவு செய்து, லாபம் சம்பாதிக்கப் பார்ப்பார்களே தவிர இலவச சேவை செய்து விட மாட்டார்கள். ஏதோ ஆன்லைன் வோட்டிங் போடலாம் என்ற வசதியாவது செய்து கொடுத்தார்களே, அது தான் அவர்கள் அளவின் நியாயம்.
'ஆனா இன்டெர்நெட்டுக்கு நான் Pay பண்ணுகிறேனே, வோட்டு போடும் போது என்னோட 'பேன்ட்  விட்த் ' எக்கச்சக்கமாய் காலியாகிறதே' - என்று MTS Data Card வைத்திருக்கும் நண்பர் ஒருவர் கேட்டார். தெரிந்தே தான் கேட்டாரா என்பது தெரியவில்லை.
**
ஆங்.. நம்ம செல்லாக் குட்டி ஸ்பூர்த்தி பற்றி சொல்லவேயில்லையே. அவர் ஒரு ஸ்பெஷல் Catergory இல் உள்ள அசாத்திய திறமையை  சின்ன வயதிலேயே கிடைக்கப் பெற்ற ஞானக் குழந்தை. எப்படி ஸ்ரேயா கோஷல், சிறு வயதிலேயே இந்த மாதிரியான  ரியாலிட்டி ஷோவில் நுழைந்து இப்போது இந்திய அளவில் கலக்கிக் கொண்டிருக்கிறாரோ - அதே மாதிரி வரப் போகிற பெண் அவள் - குறித்து வைத்துக் கொள்ளுங்கள், Bet you.
**
ஸ்பூர்த்தி, ஹரி பிரியா முதலிரண்டு இடம். பரத் அல்லது  ஸ்ரீஷா தான் மூன்றாமிடம் வந்திருக்க வேண்டும் - நியாயமாய் பார்த்தால்.



**

Thursday, February 19, 2015

பை பை ஏர்டெல், வெல்கம் ACT ஃபைபர் நெட்




இந்த அரசு அலுவலர்கள் டைப் ரைட்டர் மெஷினில் ஒற்றை விரலை வைத்து டைப்பி கொண்டிருப்பார்களே, அது போலத் தான் நானும்,  பத்து நாளாய் மொபைல் டேட்டாவில் ஒற்றை விரலில் தடவி தழுவி முக நூலில் உலாவினேன். ஒன்றிரண்டு பதிவும் போட்டேன்.  காரணம் வசிப்பிட மாற்றம். முந்தைய ஏர்டெல் ப்ராட் பேண்ட் 4 Mbps ஸ்பீட்- 15 GB FUP பிளானை தற்சமயம் உங்கள் புது இடத்திருக்கு technical feasibility இல்லாததினால் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் 8 Mbps எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். காசு அதிகமாகுமே என்றதற்கு, அப்போ 2 Mbps எடுத்துக்கோ.. என்று திமிர் காட்டினார்கள். சரி, உன்னை ஏற கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று, பெங்களூரில் ஹிட்டடிட்டத்து  தற்சமயம்  சென்னையிலும் கலக்கி வரும் ACT  ஃபைபர் நெட்டுக்கு தொடர்பு கொண்டேன். தெய்வாதீனமாய் என்னுடைய ஏரியாவில் அவர்களின் சர்வீஸ் அவைலபிளிட்டி இருந்தது. இதற்கு முன்னர் ஏர்டெல்லுக்கு ஆயிரத்து நானுற்றி சொச்சம் கட்டிக் கொண்டிருந்தேன், அதை விட அதிகமான ஸ்பீட், அதிகமான GB ற்கு.  Rs.999/- + S Tax. (20 Mbps ஸ்பீட்- 40 GB FUP) - செம ப்ளான்ல...! 

ரெண்டே நாளில் வேலையை முடித்து விட்டார்கள். இது கேபிள் கனக்சன் போலத் தான். வீட்டு வெளியே ஒரு பாக்ஸ் அடித்தார்கள். (அதிலிருந்து எட்டு கனக்சன் எடுக்க முடியுமாம்).  பாக்ஸ் உள்ளே பெரிய சைஸ் மோடம் மாதிரி + பட்டெரி இருந்தது. அதற்குத் தேவையான பவரை நம் மீட்டரிலிருந்து எடுப்பதால், பில்லில் மாதத்திற்கு 50 ருபாய் டிஸ்கவுண்ட். :-) இந்த பாக்சில் இருந்து ஃபைபர் கேபிள் வான் வழியில் பயணித்து அருகாமையில் இருக்கும் இதை விட பெரிய சைஸ் சர்வர் பாக்ஸ்ற்கு செல்கிறது. அந்த சர்வர் பாக்ஸ் உங்கள் வீட்டில் வைக்க நீங்கள் அனுமதி கொடுத்தால், உங்களுக்கு கனக்சனே  ஃப்ரீயாம்.  இப்போதைக்கு சென்னையில் சில ஏரியாக்களையும் தான் கவர் செய்திருக்கிறார்கள். இதை பற்றி 'it rocks' என்று  ஒபினியன் கொடுத்த பிரபு காளிதாசிற்கும் நன்றி.

ஃபைபர் ஆப்டிகல் கேபிளை சொருகி இணையத் தொடர்பு கிடைத்த பின்பு தான் இதயம் சீராய் இயங்கத் தொடங்கியிருக்கிறது...

Please consider the environment before printing this.


இதை அச்சிடும் முன் சுற்றுச் சுழலை கருத்தில் கொள்ளவும்.
(Please consider the environment before printing this.)
+++++++++++++++++++++++++++++++++++++++++
மரங்களை காப்போம். தேவையான போது மட்டும் அச்சிட்டு கொள்ளவும். (Save Trees. Please Print only when necessary.)

இப்படியான வாசகங்களை தினந்தோறும் உங்களுக்கு வரும் மெயில்களின் சிக்னேசர் ஃ புட்டரில் அல்லது உங்களின் இன்டர்நெட் பேங்க் பரிவர்த்தனைகளில் பார்க்க நேரிடலாம். ரொம்ப காலமாகவே எல்லா வங்கிகளும், பிசிகல் காபியை unsubscribe செய்து,  ஈமெயில் காப்பியிற்கு subscribe செய்து கொள்ளுங்கள் என்று மேற்கண்ட கருத்தை வலியுறுத்தி வருகின்றன. 

சும்மாவே எனக்கு சமூக விழிப்புணர்வு ஜாஸ்தி (அப்டின்னு நினச்சுட்டுருக்கேன்). அதுவும் முக நூலுக்கு வந்த பிறகு அந்த உணர்வு  ஊற்றெடுத்து பெருகி பொங்கி பிரவாகமாக நாலாபுறமும் பாய்வதாக (அதுவும்) நினச்சுட்டுருக்கேன்.

ஆக, நான் வைத்திருக்கும் எல்லா வங்கி கணக்கிற்கும் (சுவிஸ், தவிர) இந்த மாதிரிக்கு அந்த மாதிரியாய் மாற்றியாயிற்று. கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட் உட்பட. ஒன்லி ஈமெயில் ஸ்டேட்மென்ட், நோ ஹார்ட் காப்பி.

நிற்க. இப்போது ஏதோ தேவை ஒன்றிற்கு Address Proof தேவைப்பட்டது. என்னிடம் அது லேது. பட் 'கிரெடிட் கார்ட்' வைத்திருக்கிறேன். சம்பந்தப்பட்டவர், 'ஏதாவது உங்களுக்கு வந்த சமீபத்திய ஸ்டேட்மென்ட் (ஒரிஜினல்) கொடுங்கள் போதும்.. கண்ணை மூடி வாங்கி கொள்வோம்'. என்றார்  (ஏன்னா... கார்டு கம்பனி,  கடன் கொடுத்து திரும்ப வாங்குறவன்ல ....)

அடுத்த தேர்வாய், உடனடியாய் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிற்கு ஓடினேன். கடைசி மூன்று மாத ஸ்டேட்மென்ட், ஹார்ட் காப்பி பிரிண்ட் அவுட்ற்கு எழுதி கொடுத்தேன். "அதற்கு Rs.100 + Service Tax ஆகும். நீங்க காசு கைல கொடுக்க வேண்டாம். நாங்களே உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வோம்" என்றவாறே எடுத்துக் கொடுத்தார் வங்கி பிரதிநிதி. அது முப்பது பக்கத்திற்கு ஒன்றும் ஓடி விடவில்லை. வெறும் மூன்றே பக்கம் என்பது தான் 'என்ன கொடுமை சார் இது'.

"இந்த சமூகத்திற்கு நான் செய்ததற்கு பிரதிபலனாய், சண்முகம் எனக்கு என்ன செய்தான் ?"  என்ற பலத்த சிந்தனையுடன் வீடு  திரும்பினேன்.