Friday, December 26, 2014

ஹேமா சின்ஹா



ஹேமா சின்ஹா என்னும் இந்த புள்ளையத்தான் நேற்று மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் யாரோ அசிங்கப்படுத்தியதாக அறிகிறேன். விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவரின் தமிழ் பேசும் உச்சரிப்பை கண்டு அவர் கொதிப்படைந்து “பேசுனது போதும், வேற யாரையாவது பேச சொல்” என்று கத்தியிருக்கிராராம். யார் அவர் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஜோல்னா பை வைத்திருப்பவராகவும், அடர்த்தியான தாடியுடன், தடிமனான கண்ணாடி அணிந்தவராகவும் இருக்கக் கூடும். (கற்றது தமிழ் ஜீவா இல்லை இல்லை கற்றது தமிழ் ராம் ஞாபகத்துக்கு வர்றாங்கல்ல…)
ஒரு காலத்தில் சன் மியூசிக்கில் காம்பயரிங் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெண்கள் அல்ல. தேவதைகள். அப்படியாப்பட்ட தேவதை சந்ததியரின் கடைசி தலைமுறையை சேர்ந்தவர் தான் இந்த ஹேமா சின்ஹா.
பக்க பக்கமாய் இலக்கியம் படித்தது இருக்கட்டும். உனக்கு கொடுத்து அனுப்பிச்ச இன்விடேஷனை ஒழுங்கா படிச்சியா? சின்ஹா பெயரை பார்க்கும் போதே தெரிய வேணா…இந்தளவிற்கு தமிழ் பேசுவதே பெரிய விஷயம். வாசிப்பு எதை எதையோ கற்றுக் கொடுக்கும் என்கிறார்களே. உனக்கு அது ஒரு அடிப்படை நாகரிகத்தை, கொஞ்சூண்டு சகிப்புத் தன்மையுமா கற்றுக் கொடுக்கவில்லை.
பாவம் அந்தப் பெண், கண் கலங்கியவாறு விழா முடியும் வரை பின்னாலேயே நின்று கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் எப்படி இருந்திருக்கும் அவரின் மனநிலை.
இந்த மாதிரி தான் சமீபத்தில் கோவாவில் நடந்த பட விழாவில் DD சேனலை சேர்ந்த ஒரு பெண் காம்பியர் தப்பாய் ஒருவரின் பெயரை ரேப்ரசென்ட் பண்ணி விட்டார். அவரை சோசியல் மீடியாவில் ஒட்டு ஓட்டுவென ஒட்டியிருக்கிறார்கள். நாம் லிங்குவை ஒட்டின மாதிரி. அவர் தற்கொலை செய்யும் மனநிலை வரை சென்று விட்டாராம்.
இதெல்லாம் பாவம் மை சன்ஸ் !

0 comments:

Post a Comment