Monday, October 13, 2014

அதிதி 2014 (தமிழ்)



இந்த மாதிரி நாலு படம் தொடர்ச்சியாய் பாத்தோம்னா நாமளும் ரொம்ப நல்லவங்களாக மாறிவிடுவோம்.
அதிதி படத்தை  பற்றித்தான்  சொல்கிறேன். “என்னது காந்தி செத்துட்டாரா?” என்று கேட்காமல் படியுங்களேன். மலையாளத்தின் “Cocktail” படத்தை கிரெடிட் கொடுத்து தழுவி எடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் கிரெடிட் கொடுக்காமல் எடுத்திருந்தார்களாம் அதாகப்பட்டது “Butterfly on Wheel” (ஆங்கில படமோ / கனடா படமோ தெரியவில்லை) என்ற படம் தான் மூலம். ஆனால் அந்த மூலத்தின் மூலமே ஒரு கொரியன் படம் என்கிறார்கள். அதனால் யாருக்கு கிரெடிட் கொடுப்பது என்ற குழப்பம் வந்திருக்கலாம். ஆக எல்லோருக்குமே தலகாவேரி கொரியன் படங்கள் தான் போல.
இடையில் ஒரு விஷயத்தை பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து ஒரு வருடம் ஓடிய லத்திகா படத்தின் Tag லைன் “Butter on Wheel”. சோ, பவர் ஸ்டாரும் உலக படங்களை உன்னிப்பாய் பார்க்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது.
அதிதி படம், கடைசி பத்து பதினைந்து நிமிடங்கள் மட்டும் தான் நம்மை ஊகிக்க முடியாத தருணத்தில் ஆழ்த்தி திடுக்கிட வைத்து ,மெசேஜ் சொல்லும் ஒரு பா(ப)டமாய் அமைகிறது. அது வரை கொஞ்சம் சோதனை தான். சுருக்கமாய் சொன்னால் பட முடிவில் நாம் வில்லன் என் நினைப்பவர் தான் ஹீரோ, ஹீரோ என்று நினைப்பவர் தான் வில்லன். எப்படி…?
மலையாளத்தில் வில்லன் போன்று நடித்திருப்பவர் ‘ஜெயசூர்யா’, அறிமுகமானவர். பெர்ஃபான்ஸ் கொடுப்பவர். அம்மாதிரி ஒரு நடிகரை வைத்து தமிழிலும் முயற்சித்திருக்கலாம். இங்கு எவரோ புதுமுகம். எடுபடவில்லை. பார்ப்பதற்கு கற்றது தமிழ் ராம் போல் வேறு இருக்கிறார்.
இப்போது நீங்கள் படத்தை பார்க்க நினைத்து டொரண்டில் போட்டால் கூட சீட் (seed) பண்ணுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்ற தகிரியத்தில் கதையை சொல்லி விடுகிறேன்.
தன் பெண் குழந்தை மீது உயிராய் இருக்கும் காதலித்து மணம் முடித்த ஹீரோ ஒரு கட்டுமான நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவன். அவனால் நிறுவனத்தில் பணிபுரியும் தவறானவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதை தொடர்ந்து ஹீரோவின் குழந்தை வீட்டிலேயே சிறை வைத்து கடத்தப்படுகிறது, தம்பதியர் காரில் பயணம் போகும் சமயத்தில் லிப்ட் கேட்டு ஏறும் வில்லனால்.
தொடர்ந்து ஒவ்வொரு காரியமாய் செய்ய பணிக்கிறான் வில்லன். ஏன் எதற்கு என்று ஹீரோவிற்கும் தெரிவதில்லை. நமக்கும். இதன் நீளம் ஜாஸ்தி என்பதால் பொறுமை என்பது யாதனில் பற்றிய சிந்தனை எல்லாம் நமக்கு வருகிறது. காசு கொடுத்து பார்க்கிற சாதாரண காமன் மேன்ற்கு அது வருமா? இல்லை அவனுக்கு அது தேவையா ?
முடிவில் தான் தெரிய வருகிறது, பிளான் செய்ததே ஹீரோவின் மனைவியும், வில்லனும் தான் என்று.
ஹீரோவும், வில்லனில் மனைவியும்  ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். கசமுசாவில் இருப்பவர்கள். வில்லன் மெத்த படித்தவர்.  மனைவியை சரியாய் கவனிக்க முடியாமல் அல்லது மனைவியே அவ்வாறு நினைத்து அலுவலகத்தில் பணிபுரியும், ஆறுதலாய் பேசும் ஆடவன் (ஹீரோ) மீது ஈர்ப்பு கொள்கிறாள். என்ன தான் நல்லவனாய் இருந்தாலும் வலிய வருவதை தவிர்க்க முடியாமல் உபயோகிக்கிறான், ஹீரோ. இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஹீரோவின் மனைவியும், வில்லனும் குழந்தையயை கடத்தி, நாடகம் ஆடி கணவனை திருத்துவதே கதை.
நல்ல படம்யா. முடிஞ்சா பாருங்க…. : -)

0 comments:

Post a Comment