Thursday, October 2, 2014

அளவிற்கு மிஞ்சினால் பாயசமும் பாய்சன் தான்

அதிமுக  அமைச்சர்களின் விசுவாசத்தை பற்றித்தான்  சொல்கிறேன்.
“சிறையில் ஜெ. நலமுடன் இருப்பதாக டிஐஜி கூறுவது ஏன்?- ஜாமீன் கிடைப்பதை கெடுக்கும் முயற்சி என கர்நாடக அரசிடம் அதிமுகவினர் புகார்.”
அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் காட்டித்தான் ஜாமீன் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி அம்மா நலமுடன் இருக்கிறார் என்று டிஐஜி சொன்னால் ஜாமீன் கொடுக்க மாட்டாங்கல்ல.. என்று “அமைச்சர்கள்” முறையிடுகிறார்களாம்.
“ஜெயலலிதாவின் கைதும்,அவரது சிறைவாசமும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சிறையில் நன்றாக இருக்கிறார் என்று சொன்னால் மக்களிடம் அமைதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அதனால் தான் ஊடகங்கள் மூலம் எனது கடமையை நிறைவேற்றினேன்” – இது டிஐஜியின் பதில்.
வேறு ஒரு மாநில டிஐஜிக்கு இருக்கும் பொறுப்பு, நமது மாநில அமைச்சர்களுக்கு இல்லையே. அப்போ “அம்மாவிற்கு உடல் நலம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது” என்றா பேட்டி கொடுக்கச் சொல்கிறீர்கள். அப்படி சொன்னால் ஜாமீன் உடனே கொடுத்து விடுவார்களா ? அப்படி சொன்னால் தமிழகத்தில் என்ன ஆகும் என்று உங்களால் கணிக்க முடியாதா ? யாரோ எக்கேடோ கெட்டு போகட்டும். அம்மா வெளியே வரணும் என்பதில் தானேய்யா குறியாய் உங்கள் விசுவாத்தை காட்டுகிறீர்கள். நான் நலமுடன் இருக்கிறேன் என்று அம்மா சொல்வதை வைத்து தான் டிஐஜி பேட்டி கொடுக்கிறார். டிஐஜியை ஒன்றுமே பேசாமல் சும்மா வேறு இருக்க சொல்லுகிறார்களாம்.
தண்டனை என்று ஒன்று கொடுத்த பிறகு தடாலடியாக எல்லாம், எல்லா நீதிமன்றங்களில் வேலை நடந்து விடாது. பெரிய பெரிய வக்கீல்களை பிடித்து லட்சக்கணக்கில் ஃபீஸ் கொடுத்தால், தூக்கி கொடுத்து விடுவார்களா என்ன ?
கொஞ்சம் வெயிட் பண்ணா கீழ் கோர்ட்லேயே ஜாமீன் கொடுத்துட்டு போக போறாங்க..
மருந்து சாப்பிட்டா ஏழு நாளைக்குள்ள சரியாயிடும்.
மருந்து சாப்பிட்டலன்னா….. ?
ஒரு வாரத்தில சரியாயிடும் !
- மாதிரி

0 comments:

Post a Comment