Saturday, October 18, 2014

வரும்…,ஆனா வராது…..


தமிழ் ஹிந்து வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஊர் ஊராய் சென்று வாசகர்களுடன், பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார்கள். மெச்சத் தகுந்த நல்ல பல கட்டுரைகளுடன் ஒரு மதிப்பான செய்தி செய்தித்தாளாய் உருமாறி வருகிறது என்றே சொல்லலாம். நிற்க.
மூன்று மாதத்திற்கு முன் நானும் ஆறு மாத சந்தா கட்டி அதில் ஐக்கியமானேன். மூன்று மாதம் வரை ஒழுங்காய் தான் விநியோகித்து வந்தார்கள். கடந்த மூன்று நாட்களாய் பேப்பர் வருவதில்லை. காரணம் கேட்டதற்கு “நீங்கள் மூன்று மாத சந்தா தான் கட்டியிருப்பீர்கள், அதனால் நிப்பாட்டி இருப்பார்கள்” என்றார் லோக்கல் பாயிண்ட் டெலிவரி ஏஜென்ட். உடனே தமிழ் ஹிந்து அலுவலகத்திற்கு தகவல் கொண்டு விசாரித்ததில், “இல்லை உங்களுக்கு ஆறு மாதம் வரை டெலிவரி உண்டு, நீங்கள் லோக்கல் விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளுங்கள்” என்று (டேக் டைவெர்சன்) திருப்பி விட்டார்கள். தமிழ் ஹிந்து அலுவலகத்தில் இந்த பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவு எளிதாய் கிடைத்து விடவில்லை. அரை நாள் ஆகி விட்டது. ஒன்று லைனே கிடைக்காது. லைன் கிடைத்தால் ஹோல்டில் போடுவார்கள், பின்பு ட்ரான்ஸ்பர் செய்கிறேன் என்று சுத்தலில் விடுவார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்து, நாமே தொடர்பை துண்டிக்க வைக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு Management ட்ரைனிங்கில் சொல்லியிருப்பார்கள் போல. ஆச்சா…
இப்போது லோக்கல் விநியோகஸ்தர் முறை. அவருக்கு கால் செய்தால் “கண்ணா, பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..” என்று அவரின் ரிங் டோனை எனக்கு மனனம் செய்ய வைத்தாரே தவிர போன் எடுக்கப்படவேயில்லை. “பேப்பர் இன்னைக்கு வரும், நாளைக்கு வராது” என்பதன் குறியீடு போல அது.
அடுத்த என்ன.., மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தேன். காசோலை வாங்கி கொண்டு போன ஹிந்து பிரதிநிதி, பிறகு லோக்கல் பாயிண்ட் டெலிவரி ஏஜென்ட், மறுபடியும் ஹிந்து அலுவலகம் என்று காலை டிபன் சாப்பிட்டு உட்கார்ந்தால் மதியம் சாப்பாட்டிற்கு தான் எழுந்திருக்க முடியும்.
இன்று மூன்றாம் நாள், கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டு, நானும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, ஒரு மாதிரி மன உளச்சலை உண்டாக்கி கத்த விட்டு விட்டார்கள். ஆனால் அவர்களில் யாருமே டென்ஷனே ஆகவில்லை. காதில் போட்டால் தானே, இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவது.
எப்போதும் போல இன்றைக்கும் சொல்லியிருக்கிறார்கள், “நாளைக்கு டெலிவரி ஆகிவிடும், ஐயா”. என்று.
இதனால் உளவியல் ரீதியாக எவ்வளவு பதற்றத்தை உண்டாக்குகிறார்கள் பாருங்கள். என்னிடம் பேசிய இத்தனை பேர்களில் யாரிடமுமே உணர்வு என்பதே இல்லையோ என்றே ஐயம் வருகிறது, இல்லை அவைகள் மரக்கடிக்கப்பட்டு விட்டவனைகளா..
ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டன். இதில் ‘மக்கள் குரல்’ என்று ஒரு பகுதி வருகிறது. ஊரில் உள்ள பிரச்சனைகளை நாம் தொலைபேசியில் பதிந்தால், அதற்குண்டான நடவடிக்கை உடனடியாய் எடுக்கப்பட்டு, தீர்வு கிடைத்தவுடன் பெருமையாய் பதிவார்கள்.

0 comments:

Post a Comment