ஃபாக்ஸ் ஸ்டார், அட்லீ, மகன், சம்மர் லீவு, குடும்பம், பாப்கார்ன் கோக் காம்போ முதலானவைகளையே முக்கிய காரணம், படத்தை பார்க்க முடிவெடுத்ததற்கு.
வீட்டுப் ப்ரோக்கர் ஜீவா. ஒவ்வொரு வீட்டையும் ஏதாவது தகிடுதத்தம் செய்து தான் விற்கிறார். அவர் வாங்க விரும்பும் வீட்டிற்கும் அதே பாணியை பின்பற்ற.. அதுவே 'பூதாகாரமாய் விடிகிறது.
படம் கொஞ்சம் யதார்த்தமாய் தான் ஆரம்பிக்கிறது. நல்லாதானே போயிட்டு இருக்கு.. எனும் சமயத்தில், திடீரென முகம் தெரியாத ஆட்களால் நம் முகத்தை போர்வையில் பொத்தி, கும்மு கும்முவென கும்மப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி.. ஜீவா வீடு வாங்குவதற்கான லட்சிய காரண ஃபிளாஸ்பேக்கை சொல்லி, கும்மி அப்புறம் அவிழ்த்து விடுகிறார்கள்.
சரி போகட்டும், அந்த பேய் ராதாரவிக்காவது பயந்து, ஒரு உருப்படியான ஃபிளாஸ்பேக்கை வைத்திருக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் சுந்தர் சி யின் சீரியல் ரேஞ்சிற்கு இருக்கிறது.
இரண்டு கிளை கதைகளும் சொதப்பிய பின், எஞ்சி நிற்பது ஜீவா சூரி காமெடி காம்போ தான். ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். ஹீரோயினாக ஸ்ரீவித்யா இருக்கிறார்.
இயக்குனர் 'ஐக்' எம்ஆர் ராதாவின் பேரன் என்று அறிய வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தில் ராதாரவி, ராதிகா, எம் ஆர் வாசு போன்ற குடும்ப உறுப்பினர்கள் தென்பட்டனர். அதே சமயத்தில் இயக்குனர், கமலிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் தெரிய வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான், படத்தில் ஒரு காட்சி கூட தென்படவில்லை.
0 comments:
Post a Comment